வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2015ம் ஆண்டின் மறக்க முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்றது வரலாற்றுப் படமான 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் நேரடியாகவும், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய மொழிப் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படமாக சாதனை புரிந்தது. முதல் பாகம் உருவாகும் போதே இப்படத்தின் 40 சதவீத இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடித்து விட்டார்கள்.
இரண்டாம் பாகத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் 17ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் ஆரம்பமானது. பிரபாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அன்றிலிருந்து தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். ராணா வேறு சில படப்பிடிப்புகளில் இருப்பதாலும், தமன்னா தற்போது 'தர்மதுரை' படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாலும் தொடர்ந்து 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். விரைவில் அவர்களும் மற்ற நடிகர்களும் 'பாகுபலி' படத்தில் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்காக தங்களது கால்ஷீட்டுகளை ஒதுக்கியுள்ளார்களாம்.
அனைத்து நடிகர்களுடன் விரைவில் ஆரம்பமாக உள்ள தொடர் படப்பிடிப்பு இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நடக்க இருக்கிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்தான் படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து முடிவெடுக்க உள்ளார்களாம்.