மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2014-ல் ரவிதேஜாவுடன் இணைந்து பவர் படத்தில் நடித்த பிறகு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை ஹன்சிகா. அதையடுத்து தமிழில், அரண்மனை, மீகாமன், ரோமியோ ஜூலியட் ஆம்பள, வாலு, புலி என வரிசையாக பல படங்களில் நடித்தார். தற்போது அரண்மனை-2, போக்கிரிராஜா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் தற்போது தமிழில் படங்கள் படிப்படியாக குறைந்து வருவதால், இதை பேலன்ஸ் பண்ண வேண்டும் என்பதற்காக தெலுங்கு படங்களில் நடிக்க முயற்சி செய்தார் ஹன்சிகா. ஆனால் தற்போது அவருக்கு அங்கு மார்க்கெட் இல்லாததால் புதிய படங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இந்த நேரத்தில் தமிழில் அவர் சிம்புவுடன் இணைந்து நடித்த வாலு படம் ஷார்ப் என்ற பெயரில் தெலுங்கில் டப்பாகி வருவதால், அந்த படத்திற்கு பிறகு புதிய தெலுங்கு படங்கள் புக்காகும் என்று எதிர்பார்க்கிறார் ஹன்சிகா.
அதோடு, தெலுங்கைப்பொறுத்தவரை சிம்புவை விட ஹன்சிகாவே ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர் என்பதால், 2.40 நிமிடம் இருந்த வாலு படத்தில் சிம்பு சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை கத்தரித்து விட்டு படத்தை 2.30 நிமிடமாக்கியுள்ளனர். அதேசமயம் ஹன்சிகாவின் காட்சிகளில் கைவைக்கவில்லையாம். மேலும், அவரை முன்னிறுத்தியே ஆந்திராவில் ஷார்ப் பட விளம்பரம் செய்யப்பட உள்ளதாம். அதனால், புதிய உற்சாகத்துடன் தெலுங்கு பட வேட்டை முடுக்கி விட்டிருக்கிறார் ஹன்சிகா.