ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பில் ஐ, ஓகே கண்மணி என்ற இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வந்தது. இரண்டு பட பாடல்களுமே ஹிட் ஆனது. 2015ம் ஆண்டில் கால்பந்து வீரர் பீலே வரலாற்று கதைப் படம், முகம்மது என்கிற ஈரானிய படம், தமாசா என்கிற இந்திப் படம் ஆகியவற்றுக்கும் இசை அமைத்திருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு சென்னையிலேயே தங்கியிருந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். இந்த ஆண்டு ரகுமான் இசை அமைப்பில் உருவாகி உள்ள கவுதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா', சூர்யா நடித்துள்ள '24' படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. 'இறைவி' படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். மேலும் சில படங்களுக்கு இசை அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்து ஆண்டு குறைந்தபட்சம் 5 தமிழ் படங்களுக்கும் 2 இந்திப் படத்திற்கும் இசை அமைக்க முடிவு செய்திருக்கிறார்.
இதுதவிர அவர் ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம். மூவீஸ் சார்பில் ஒரு இந்திப் படமும், இரண்டு தமிழ் படமும் இந்த ஆண்டு தயாரிக்க உள்ளார். 3 படங்களும் இசை தொடர்பான படங்கள், இந்திப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தமிழ் படம் இயக்க இயக்குனர் தேடிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தின் கதையை ரகுமானே எழுதியிருக்கிறார். ரகுமான் 2016ம் ஆண்டை இந்தியாவுக்கென ஒதுக்கி இருக்கிறார்.