டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1990-ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானவர் விக்ரம். அதையடுத்து, தமிழ்,தெலுங்கு, மலையாளம் என சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்த பிறகு 1999-ல் பாலா இயக்கிய சேது படத்தில் நடித்தார். அந்த படம்தான் அவரை உலகுக்கு முழுசாக அடையாளம் காட்டியது. அதனால்தான் இப்போதுவரை விக்ரமின் முதல் படம் சேது என்றே பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன்பிறகு பிதாமகன், காசி, அந்நியன் என மாறுபட்ட வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் தானும் ஒருவராகி விட்டார் விக்ரம். மேலும், அவர் நடித்த படங்களில் ராவணன், டேவிட் ஆகிய படங்கள் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகின. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு நேரடி இந்திப்படத்தில் நடிக்கப்போகிறார் விக்ரம்.
இந்தி சினிமாவில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை பிரபல இந்திப்பட இயக்குனர் ஓம் ராவுத் என்பவர் இயக்குகிறாராம். கதையைக்கேட்டு அப்படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்ட விக்ரம், தமிழில் கைவசமுள்ள மர்ம மனிதன், கருடா ஆகிய படங்களை முடித்ததும் இந்த ஆண்டு இறுதியில் அந்த இந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.