ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் உள்ள நடிகைகளில் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் என்ற பெயரெடுத்த நடிகைகளில் ஒருவர் பார்வதி. சசி இயக்கிய 'பூ' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு 'சென்னையில் ஒரு நாள்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். 'மரியான்' படத்தில் தனுஷ் ஜோடியாகவும், 'உத்தம வில்லன்' படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும் நடித்தார். தற்போது 'பெங்களூர் நாட்கள்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரிஜனலான மலையாள 'பெங்களுர் டேய்ஸ்' படத்தில் நடித்த கதாபாத்திரத்திலேயே தமிழிலும் நடித்துள்ளார்.
ஆனால் , தமிழ்ப் படத்தில் நடிக்க அழைத்த போது ஒரு நிபந்தனை விதித்தாராம். மலையாளத்தில் நான் எந்த கதாபாத்திரத்தில், எந்தப் பெயரில், என்னவாக நடித்தேனோ அதை மாற்றாமல் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தில் சாரா எலிசபெத் என்ற கிறிஸ்துவப் பெண்ணாக அவர் நடித்திருந்தார். ஆனால், தமிழுக்காக அதை வேறு எந்த விதமாகவும் மாற்றக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கான விளக்கத்தை நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார். “மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களில் எனக்கு உடன்பாடில்லை. அங்கு கிறிஸ்துவக் குடும்பமாக காட்டப்பட்டது, இங்கு மாற்றப்படுகிறது. அவை எந்தப் படங்கள் என்று சொல்லி சர்ச்சைக்குள் சிக்க விரும்பவில்லை. ஆனால், அது தான் உண்மை. மதம், சாதி என்பது மட்டும்தான் கலாச்சாரம் என்பது இல்லை. தமிழில் முஸ்லிம், கிறிஸ்துவக் கதாபாத்திரங்கள் மிகவும் குறைவாகவே காட்டப்படுகின்றன,” என்றும் குறைபட்டுக் கொண்டார்.
சர்ச்சைக்குள் சிக்க விரும்பவில்லை என்று பார்வதி சொன்னாலும் அவர் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தைப் பற்றித்தான் சொன்னார் என்பது ரசிகர்களுக்கும் புரியாதா என்ன?. மலையாள 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் குடும்பம் ஒரு கிறிஸ்வதுவக் குடும்பமாகக் காட்டப்பட்டது. ஆனால், அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்த போது ஒரு இந்துக் குடும்பமாக மாற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.