ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டிஸ்கவரி சேனலுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் டிஸ்கவரி தமிழ் சேனல் சினிமாவில் கால் பதிக்கிறது.
பாலா இயக்கி உள்ள 'தாரை தப்பட்டை' படம் தஞ்சாவூரில் வாழும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியது. கதைப்படி டிஸ்கவரி தமிழ் சேனல் நிருபரும், கேமராமேனும் தஞ்சையில் உள்ள பிரபலமான கரகாட்ட கலைஞர் சாமி புலவரை பேட்டி எடுக்கச் செல்கிறார்கள். அவர் இறந்துவிட அவரது மகன் சன்னாசியிடம் (சசிகுமார்) கரகாட்டம் பற்றி கேட்கிறார்கள். அவர் சொல்லும்போது அது கதையாக விரிகிறது.
இதுபற்றி பாலா, டிஸ்கவரி சேனல் அதிகாரிகளிடம் சொன்னபோது அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட சேனல், அதையே தாங்களும் ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பால ஒப்புக் கொள்ள தற்போது இரண்டு பணிகளும் முடிந்திருக்கறிது.
"தென்னிந்தியாவில் எங்கள் சேனலுக்கு நல்ல மதிப்பு உள்ளது. தென்னிந்திய கலைகளை பற்றி உலகிற்கு தொடர்ந்து சொல்கிறோம். தாரை தப்பட்டை மூலம் கரகாட்டக் கலையை ஆய்வு செய்து அதனையும் சொல்ல இருக்கிறோம். ஒரு நல்ல பணியில் பாலாவுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் டிஸ்கவரி சேனலின் தென்னிந்திய பொது மேலாளர் ராகுல் ஜோரி.