சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தென்னிந்திய நடிகைகளில் கடந்த 2015ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து முடித்தவர் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் நித்யா மேனன். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா இவர்கள் ஆரவாரமாக இருக்க அமைதியாக இந்த சாதனையை செய்து முடித்திருக்கிறார் நித்யா மேனன்.
தமிழில் மட்டும் அவர் ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ருத்ரமாதேவி, ஓகே கண்மணி, அப்பாவின் மீசை என 5 படங்களில் நடித்து முடிததிருக்கிறார். இதில் அப்பாவின் மீசை மட்டும் வெளிவரவில்லை. இது தவிர தெலுங்கில் மல்லி மல்லி இடி ராணி ரோஜு, சன் ஆஃப் சத்தியமுர்த்தி, ருத்ரமாதேவி(தெலுங்கு) படங்களில் நடித்துள்ளார், 110 டேய்ஸ் ஆஃப் லவ் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். ஆண்டுக்கு 8 படங்கள் என்றால் 45 நாட்களுக்கு ஒரு படத்தில் நடித்து சாதனை படைத்திருக்கிறார் நித்யாமேனன். இந்த ஆண்டு, '24, முடிஞ்சா இவனை புடி, மர்ம மனிதன்' ஆகிய தமிழ் படத்திலும், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.