போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
2002-ல் விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதே படத்தில் உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலையும் சொந்த குரலில் பாடினார் பிரியங்கா. அதன்பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்ட அவர், தற்போது குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியலில் அலெக்ஸ் பாரிஸ் என்ற லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் முதல் சீசன் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த சீசன் விரைவில் தொடங்குகிறது. அதில் அதிகமான திருப்பங்களுடன் கதையோட்டம் விறுவிறுப்பாக செல்கிறதாம். அதற்காக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
மேலும், இந்த குவாண்டிகா சீரியல் ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளதாம். அந்த வகையில், 100 உலக நாடுகளில் 45 மொழிகளில் பிரியங்கா சோப்ராவின் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம். இதன்காரணமாக, சினிமாவில் 13 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து கிடைத்ததை விடவும் இந்த ஒரே சீரியல் தன்னை உலகமெங்கிலும் பிரபலமாகி விட்ட அதீத மகிழ்ச்சியில் இருக்கிறாராம் பிரியங்காசோப்ரா.