தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த் என்றால், தெலுங்குத் திரையுலகில் சிரஞ்சீவி. இருவரும் அடுத்தடுத்த வருடங்களில் சென்னை பிலிம் சேம்பர் நடத்திய நடிப்புப் பயிற்சியை முடித்து விட்டு சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். இயக்குனர் பாலசந்தரின் பார்வை ரஜினிகாந்த் மீது கொஞ்சம் சீக்கிரமே பட்டுவிட 1975ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். சிரஞ்சீவி 1978ம் ஆண்டு 'புனதிரல்லு' படம் மூலம் தெலுங்கில் நடிகராக அறிமுகமானார். 1980களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் ரஜினிகாந்தும், ஆந்திராவில் சிரஞ்சீவியும் முன்னணி ஹீரோக்களாக உயர்ந்தார்கள்.
அதன் பின் பல வருடங்கள் அவரவர் மொழிகளில் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு அந்தஸ்தைப் பெற்று இன்று அவரை அதைக் காப்பாற்றி வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக அரசியலில் குதித்தால் சிரஞ்சீவி எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். விரைவில் 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துடன் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகப் போவதாக, புத்தாண்டிற்கு தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களிடம் சிரஞ்சீவி தெரிவித்ததாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். புகழில் இருக்கும் போதே அதை விட்டு விலகுவதுதான சரியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் என்கிறார்கள்.
அதே சமயம், ரஜினிகாந்த் தமிழில் 'கபாலி, 2.0' ஆகிய இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் வழியில் '2.0' படத்துடன் ரஜினிகாந்த் நடிப்பிலிருந்து விலகுவாரா, அல்லது இன்னும் சில ஆண்டுகள் வரை நடிப்பாரா...? அல்லது வயது ஏற்ற கேரக்டரில் நடிப்பாரா.? என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.