Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராமாயணம், மகாபாரதத்தை தொடர்ந்து திருக்குறளை மனப்பாடம் செய்கிறார் சிவகுமார்

05 ஜன, 2016 - 15:20 IST
எழுத்தின் அளவு:
After-Ramayanam-and-Mahabharatham-Sivakumar-to-learn-Thirukural

நடிகர் சிவகுமார் அபார நினைவாற்றல் கொண்டவர். கம்ப ராமாயணத்தை மனப்பாடம் செய்து 100 கம்ப ராமாயண பாடல்களுடன் இரண்டு மணிநேரம் எந்த குறிப்பும் இல்லாமல், இடைவெளியும் இல்லாமல் பேசி சாதனை படைத்தார். அதேபோன்று மகாபாரதத்தை மனப்பாடம் செய்து இரண்டு மணி நேரம் இடைவெளியில்லாமல் பேசி மீண்டும் சாதனை படைத்தார். அடுத்து அவர் திருக்குறளை மனப்பாடம் செய்து இடைவெளியில்லாமல் பேசி சாதனை படைக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:


உங்களின் அபூர்வ நினைவாற்றலுக்கு காரணம் என்ன?


நான் தொடர்ந்து செய்து வரும் யோகாசனமும், கடைபிடிக்கும் உணவு கட்டுப்பாடும் தான் காரணம். இந்த இரண்டையும் சரியாக செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சாதனையை படைக்கலாம்.


இந்த முயற்சி எப்படி உருவானது?


நான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம் ,பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போய்விட்டன. இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன். நான் பெரிய பேச்சாளன் இல்லை. அடுக்கு மொழி, கவர்ச்சி நடை என்றெல்லாம் என்னால் பேசமுடியாது. அப்போதுதான் இப்படி தலைப்பு வைத்து உரையாற்றினேன். இப்படி இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15 உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம். மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள்.


தொடர் சொற்பொழிவிற்காக ஒத்திகை செய்வதுண்டா?


நான் நடைப் பயிற்சி போகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன். நான் ஆரம்பித்ததும் பலரை தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன். .


அடுத்த முயற்சி...?


யேசுவை பற்றியும், குரான் பற்றியும் பேசலாமே என்று பலரும் சொல்கிறார்கள். இயேசு மீதும், குரான் மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் என் தமிழிலேயே நான் பேச வேண்டிய விஷயங்கள், இலக்கணங்கள், இலக்கியங்கள், தத்துவங்கள் கொட்டிக்கிடக்கிறது. அடுத்து திருக்குறளை மனப்பாடம் செய்து பேச திட்டமிட்டிருக்கிறேன். உலகிலேயே ஒரு மொழியை உயர்த்தியோ, ஒரு மதத்தை உயர்த்தியோ பேசாமல் மனிதம் பேசிய இலக்கியம் திருக்குறள், அதுதான் என் அடுத்த இலக்கு. இது கடினமான பணி என்பதால் நான்கைந்து வருடங்களாவது ஆகும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in