அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
2015ம் ஆண்டு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு தமிழ்த் திரையுலகத்தில் சிறப்பான ஆண்டாக அமையவில்லை. கடந்த ஆண்டில் யுவன் இசையமைத்து வெளிவந்த மூன்று படங்களான 'வை ராஜா வை, மாஸ், யட்சன்' ஆகிய மூன்று படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன. கடந்த சில வருடங்களாகவே யுவனின் திரையுலக வாழ்க்கையில் ஒரு தொய்வு இருந்தது. ஒரு வருடத்திற்கு சுமார் 10 படங்களுக்கு இசையமைத்து அந்தப் படங்களில் பல ஹிட் பாடல்களையும் கொடுத்து வந்தவர் யுவன். 2014ல் அவர் இசையமைத்த படங்கள் வெற்றியடையவில்லை. 2013ல் 'தங்க மீன்கள்' படம் மட்டுமே பேசப்பட்டது. 2012ல் 'ஆதலால் காதல் செய்வீர்' படம் மட்டும் அவருடைய இசையில் ஓரளவிற்கு கவர்ந்த படமாக அமைந்தது. 2011ல் 'அவன் இவன், ஆரண்ய காண்டம், மங்காத்தா' ஆகிய படங்கள் அவருடைய இசையாலும் அதிகம் பேசப்பட்டது.
2011க்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களாகவே யுவன் பெரிய அளவில் சாதிக்கவில்லை. அந்தத் தொய்வை சரி செய்யும் விதத்தில் இந்த 2016ம் ஆண்டில் யுவன் ஷங்கர் ராஜா தீவிரமாக உள்ளாராம். அவருடைய இசையமைப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் சீனு இயக்கும் 'தர்மதுரை' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
ராம் இயக்கியுள்ள 'தரமணி' படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளார்களாம். இந்தப் பாடல்கள் வெளியான பிறகு மீண்டும் யுவன் இசை அலை இந்த ஆண்டு அதிகமாகும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி நடிக்க ஆரம்பமாகியுள்ள 'பேரன்பு' படத்திற்கும் யுவன் இசையமைக்கிறார். இன்னும் பல புதிய படங்களுக்கு யுவனை இசையமைக்க அவருடைய இயக்குன நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.