பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
சினிமாவில் பைட்டராக இருந்தவர் நான் கடவுள் ராஜேந்திரன். அந்த சமயத்தில் சினிமாவில் சரியான வருமானம் இல்லாமல் சென்னையிலுள்ள டிரஸ்ட் புரத்தில் ஒரு சைக்கிள் கடையும் நடத்தி வந்திருக்கிறார். அதன்பிறகு, ஒரு படத்துக்காக அவுட்டோர் சென்றபோது ஒரு தொட்டியில் கெமிக்கல் தண்ணீர் இருப்பது தெரியாமல் அதற்குள் இறங்கி குளித்தபோது அவரது தலையில் இருந்த அனைத்து முடிகளும் கொட்டி விட்டதாம். அதன்பிறகு அவர் தலையில் முடியே முளைக்கவில்லையாம். இதனால் தனது வாழ்க்கையே போய் விட்டது போல் பீல் பண்ணிக்கொண்டிருந்தாராம் ராஜேந்திரன்.
ஆனால் அந்த நேரத்தில் தனது நான் கடவுள் படத்திற்கு வில்லன் தேடிய டைரக்டர் பாலாவின் பார்வையில் ராஜேந்திரன் பட்டதை அடுத்து அவரை அப்படத்தின் கொடூர வில்லனாக்கி விட்டார். அந்த மொட்டைத்தலைதான் அவருக்கு அந்த வாய்ப்பையே வாங்கிக்கொடுத்திருக்கிறது. அதன்பிறகு நான் கடவுள் ராஜேந்திரனான அவர், சினிமாவில் வேகமாக வளர்ந்து இப்போது குறிப்பிடத்தக்க காமெடியன்களில் அவரும் ஒருவராகி விட்டார்.
ஆக, அப்போது தலைமுடி போனதை நினைத்து பீல் பண்ணினேன். ஆனால் தலையில் மொத்த முடியும் கொட்டிய பிறகுதான் நான் நீண்டகாலமாக தட்டி வந்த சினிமா கதவுகள் பெரிய அளவில் திறந்தது. அந்த வகையில், மொட்டைத்தலைதான் எனக்கு ராசியாகியிருக்கிறது என்கிறார் நான்கடவுள் ராஜேந்திரன்.