'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டமால் டுமீல், அலெக்ஸ் பாண்டியன் உள்பட பல படங்களுக்கு பாடல் எழுதியிருப்பவர் கருணாகரன். இதுவரை 60 பாடல்கள் வரை எழுதியிருக்கும் அவர், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், தமன், தரண்குமார் உள்பட பலரது இசையில் பாடல் எழுதி விட்டார். என்றாலும், தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்னும் பாடல் எழுதாதது அவருக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளதாம். அதனால் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறாராம் கருணாகரன்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழ் சினிமாவில் எப்படி வளர்ந்து வரும் ஒவ்வொரு பாடலாசிரியர்களுக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற வர்களின் இசையில் பாடல் எழுத வேண்டும் என்கிற கனவு இருக்குமோ அதேபோன்ற ஆசை எனக்கும் உள்ளது. அதனால் அவர்களை சந்தித்து பாட்டு எழுத வாய்ப்பு கேட்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அதேபோல் என்னை கவர்ந்த இயக்குனர்களான பாலா, கெளதம்மேனன் படங்களில் பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக, கெளதம்மேனனிடம் ஒரு சினிமா விழா மேடையில் எனது விருப்பத்தை தெரிவித்தேன். அப்போது எனது படத்தில் கண்டிப்பாக பாடல் எழுத சான்ஸ் தருவேன் என்று சொன்னார். அதனால் அவர் படத்தில் சீக்கிரமே நான் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறேன் என்கிறார் கருணாகரன்.