பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என அடுத்தடுத்த படங்களில் அசத்திய இயக்குநர் அமீர், தமிழின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். குறிப்பாக பருத்திவீரன் படத்தின் வெற்றி அமீரை சிகரத்தில் ஏற்றி வைத்தது. அதன் பிறகு அவர் ஹீரோவாக நடித்த யோகி படம் மிகப்பெரிய தோல்விப்படமானது.
ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து வருடக்கணக்கில் எடுத்த ஆதிபகவன் படம் அந்த ஆண்டின் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. ஆதி பகவன் படத்தின் தோல்வி அமீரை திரையுலகில் காணாமல் ஆக்கிவிட்டது. அதன் பிறகு அமீர் பற்றி ஒரு தகவலும் இல்லை. பேரன்பு பொண்ட பெரியோர்களே என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அமீர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். இந்தப் படத்தை தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன் படத்தை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார்.