இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். சங்க விதிமுறைப்படி சரத்குமார் தலைமையிலான முந்தைய நிர்வாகம் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒப்படைக்கவில்லை. இதனால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும் என்று சமீபத்தில் நடந்த சங்கத்தின் செயற்குழுவின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணக்கை ஒப்படைத்து விட்டதாக சரத்குமார் கூறிவந்தார். தற்போது அது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது... சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கணக்குகளை ஒப்படைத்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கம் தர இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
சங்கம் இரண்டு விதமான கணக்குகளை பராமரித்து வருகிறது. ஒன்று சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்ட சங்கத்தின் கணக்கு, மற்றொன்று அறக்கட்டளையின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட கணக்கு. தேர்தல் முடிந்ததும் இந்த இரண்டு கணக்குகளையும் முந்தைய நிர்வாகம் எங்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். முன்னாள் தலைவர் சரத்குமார் சங்க கணக்கை 7 நாளிலும், அறக்கட்டளை கணக்கை 15 நாளிலும் ஒப்படைப்பதாகச் சொன்னார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் கணக்கு வரவில்லை. பல நினைவூட்டல் கடிதங்களுக்கு பிறகு சங்கத்தின் ஒருவருட கணக்கை மட்டுமே தந்தார்கள். மீதி 6 மாத கணக்கு இன்னும் வரவில்லை. அந்த கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இரண்டரை ஆண்டுக்கான அறக்கட்டளையின் கணக்குகளைத் தரவில்லை. அதற்கும் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதியிருக்கிறோம். கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால் சரத்குமார். கணக்குகளை ஒப்படைத்து விட்டு அதற்கான ரசீதை பெற்றிருக்கிறேன் என்று ஊடகங்களிடம் கூறி வருகிறார். பொதுக்குழுவை கூட்டினால் கணக்கை ஒப்படைப்பேன் என்று கூறிவருகிறார். பொதுக்குழுவை கூட்ட தயங்குவதாகவும் கூறுகிறார். சங்க கணக்குகளை ஒப்படைத்த 21 நாளில் பொதுக்குழு கூட்ட நாங்கள் தயார். பொதுக்குழுவில் முந்தைய நிர்வாகத்தின் வரவு செலவை சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?. இவர்களின் பொறுப்பற்ற செயலால் வருமானவரித்துறை, சேவை வரித்துறை போன்றவற்றில் நடிகர் சங்கம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. உறுப்பினர்கள் நலன், மற்றும் சங்க நலனுக்காக இவர்கள் மீது சட்டபூர்மான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.