Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கணக்கு காட்டாத சரத்குமார் மீது சட்ட நடவடிக்கை உறுதி: நடிகர் சங்கம் அறிவிப்பு

02 ஜன, 2016 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-to-take-action-against-Sarathkumar

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். சங்க விதிமுறைப்படி சரத்குமார் தலைமையிலான முந்தைய நிர்வாகம் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒப்படைக்கவில்லை. இதனால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும் என்று சமீபத்தில் நடந்த சங்கத்தின் செயற்குழுவின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணக்கை ஒப்படைத்து விட்டதாக சரத்குமார் கூறிவந்தார். தற்போது அது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது.




அதில் கூறப்பட்டிருப்பதாவது... சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கணக்குகளை ஒப்படைத்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கம் தர இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.


சங்கம் இரண்டு விதமான கணக்குகளை பராமரித்து வருகிறது. ஒன்று சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்ட சங்கத்தின் கணக்கு, மற்றொன்று அறக்கட்டளையின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட கணக்கு. தேர்தல் முடிந்ததும் இந்த இரண்டு கணக்குகளையும் முந்தைய நிர்வாகம் எங்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். முன்னாள் தலைவர் சரத்குமார் சங்க கணக்கை 7 நாளிலும், அறக்கட்டளை கணக்கை 15 நாளிலும் ஒப்படைப்பதாகச் சொன்னார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் கணக்கு வரவில்லை. பல நினைவூட்டல் கடிதங்களுக்கு பிறகு சங்கத்தின் ஒருவருட கணக்கை மட்டுமே தந்தார்கள். மீதி 6 மாத கணக்கு இன்னும் வரவில்லை. அந்த கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.


ஆனால் இரண்டரை ஆண்டுக்கான அறக்கட்டளையின் கணக்குகளைத் தரவில்லை. அதற்கும் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதியிருக்கிறோம். கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால் சரத்குமார். கணக்குகளை ஒப்படைத்து விட்டு அதற்கான ரசீதை பெற்றிருக்கிறேன் என்று ஊடகங்களிடம் கூறி வருகிறார். பொதுக்குழுவை கூட்டினால் கணக்கை ஒப்படைப்பேன் என்று கூறிவருகிறார். பொதுக்குழுவை கூட்ட தயங்குவதாகவும் கூறுகிறார். சங்க கணக்குகளை ஒப்படைத்த 21 நாளில் பொதுக்குழு கூட்ட நாங்கள் தயார். பொதுக்குழுவில் முந்தைய நிர்வாகத்தின் வரவு செலவை சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?. இவர்களின் பொறுப்பற்ற செயலால் வருமானவரித்துறை, சேவை வரித்துறை போன்றவற்றில் நடிகர் சங்கம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. உறுப்பினர்கள் நலன், மற்றும் சங்க நலனுக்காக இவர்கள் மீது சட்டபூர்மான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in