கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
2015ம் ஆண்டின் இறுதி மாதமாக வரும் டிசம்பர் மாதக் கடைசியில் அனைவருமே மொத்த ஆண்டும் எப்படி இருந்தது என்று ரீவைன்ட் பண்ணிப் பார்ப்பதிலேயே இருப்பார்கள்.
2015ம் ஆண்டில் தங்களுக்கு நல்லது நடந்ததாக நினைத்தவர்கள் இந்த ஆண்டு அதற்குள் முடிகிறதே என்று நினைப்பார்கள், 2015ம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக இல்லை என்று நினைப்பவர்கள் எப்போது புத்தாண்டு பிறக்கும் என்று காத்திருப்பார்கள்.
2015ம் ஆண்டைப் பொறுத்தவரையில் திரையுலகத்தில் குறைவான வெற்றிகளும், நிறைய தோல்விகளும் இருந்த ஆண்டாகக் கடந்தது. அந்த சோதனையில் மற்றுமொரு சோதனையாக கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் 8 படங்களே வெளிவந்தன.
டிசம்பர் மாத முதல் வாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தால் படங்களைத் திரையிட்டு எப்படி வசூலைப் பார்ப்பது என பலரும் தங்களது வெளியீட்டைத் தள்ளிப் போட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் ஜனவரி 1ம் தேதியான இன்று 7 திரைப்படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்த வாரமும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர உள்ளன. 2016ம் ஆண்டின் ஆரம்பமே அதிகமான படங்களுடன் ஆரம்பமாகியுள்ளது.
டிசம்பர் 2015 - வெளியான திரைப்படங்கள்..
டிசம்பர் 4
உறுமீன்
டிசம்பர் 11
திருட்டு ரயில்
ஈட்டி
டிசம்பர் 18
கொக்கிர குளம்
தங்கமகன்
டிசம்பர் 25
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
பூலோகம்
பசங்க 2
டிசம்பர் மாதத்தின் மிகப் பெரும் ஏமாற்றம் மற்றும் தோல்வியாக அமைந்த படமாக தனுஷ் நடித்த 'தங்கமகன்' படம் அமைந்தது. 'வேலையில்லா பட்டதாரி'யின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்ட படத்தை வெளியீட்டிற்கு முன் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அழுத்தமான கதை இல்லாததே படத்தின் தோல்விக்குக் காரணம்.
மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 25ம் தேதியன்று வெளிவந்த 'பசங்க 2, பூலோகம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், 11ம் தேதி வெளிவந்த 'ஈட்டி' படமும்தான் கடந்த மாதத்தில் திருப்திகரமான படங்களாக அமைந்தன.
'பசங்க 2' படம் தரமான படமாக அமைந்து 'ஏ' சென்டர்களில் அதிகமாகக் கவர்ந்த படமாக அமைந்தது. இருந்தாலும் 'பசங்க' படம் மாதிரி அந்தப் படம் இல்லை என்ற பேச்சுத்தான் பரவலாகவும் எழுந்தது. 'பூலோகம்' திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் தாமதமாக வந்தாலும் சினிமா சென்டிமென்ட்டுகளை முறியடித்து லாபத்தைத் தரக் கூடிய படமாகவும் அமைந்தது. 'பி அன்ட் சி' சென்டர்களில் இந்தப் படம் ஓடுவதற்கு ஜெயம் ரவியின் முந்தைய 'தனி ஒருவன்' வெற்றியும் காரணமாக அமைந்தது.
மற்றபடி மாதத்தின் துவக்கத்தில் வெளிவந்த 'உறுமீன்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய படமாக இருந்தது. ஆனால், சென்னை, கடலூர் மக்கள் வெள்ளத்தில் தவித்த சூழ்நிலையில் இப்படி ஒரு படம் வெளிவந்தது பலரையும் சென்றடையாமல் போய்விட்டது. கொஞ்சம் தள்ளி வெளியிட்டிருந்தால் இந்தப் படம் கவனிக்கப்பட்டிருக்கும்.
டிசம்பர் 11ம் தேதி வெளிவந்த 'ஈட்டி' திரைப்படம் அதர்வாவுக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்த படமாக அமைந்தது. அதற்கு முன் அதர்வா நடித்த படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறாத சூழ்நிலையில் 'ஈட்டி' படம் அவர் மீதான நம்பிக்கை விதையை அழுத்தமாக விதைத்துள்ளது. 'ஈட்டி' வெற்றியைப் பிடித்துக் கொண்டு அதர்வா அப்படியே அடுத்த கட்டத்திற்கு பாய்ந்து விட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிவந்த மற்ற படங்கள் 2015ம் ஆண்டின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்களாகவே அமைந்தன.