ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கதகளி படத்தில், நடிகர் விஷால் பேசியுள்ள வசனத்துக்கு, நடிகை ராதிகா, டுவிட்டர் இணைய தளத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதற்கு நடிகர் விஷால், பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் விஷால், நடிகை கேத்ரின் தெரசா நடிக்கும் படம், கதகளி; இப்படம் பொங்கலுக்கு திரையிடப்படுகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது.
நடிகர் விஷால் கூறியதாவது: தவறாக செல்லும் மொபைல் போன் அழைப்பும், அதனால் ஏற்படும் பிரச்னைகளை பற்றிய கதையே, கதகளி. இப்படம், ஆக்ஷ்ன் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தில், மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்ப்பவராக நடிக்கும் கேத்ரின் தெரசாவிடம் நான், காண்டம் கேட்பதாக, ஒரு காட்சி உள்ளது. இதற்கு, நடிகை ராதிகா சரத்குமார் கண்டனம் தெரிவித்து, டுவிட்டர் இணைய தளத்தில் தகவல் பதிவு செய்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, கூறியுள்ளார்.
இதற்காக மன்னிப்பு கேட்க அவசியமே இல்லை. காண்டம் என்பது, செக்ஸ் கல்வி சம்பந்தப்பட்டது. அந்த வார்த்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்த கூடியது தான். அதில் ஒன்றும் தவறு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.