'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப்புக்கு கடந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் எதுவும் இல்லை. இந்த வருடம் அவரது முதல் படமான 'இவன் மரியாதராமன்' படம் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் தான் வெளியானது.
தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் வெற்றியை சுவைத்த ராஜமவுலியின் 'மரியாத ராமண்ணா'வின் ரீமேக்கான இந்தப்படம் தனக்கு பிரேக் கொடுக்கும் என நம்பினார் திலீப்.. ஆனால் அது பாக்ஸ் ஆபீஸில் மண்ணை கவ்வவே, துணிந்து அடுத்த 2௦ நாட்களிலேயே தனது அடுத்த படமான 'சந்திரேட்டன் எவிடயா' படத்தை ரிலீஸ் செய்தார்.
வழக்கம்போல இதுவும் சாதாரண படமாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் ரிலீஸான மூன்றே நாட்களிலேயே 2 கோடி வசூலித்த இந்தப்படம், மொத்தத்தில் 15 கோடியை வசூலித்து திலீப்பின் கௌரவத்தை ஓரளவு காப்பாற்றியது. அதற்கு காரணம் பூர்வ ஜென்மத்தை இந்த ஜென்மத்துடன் இணைத்து சொல்லப்பட்டிருந்த வித்தியாச பாணியிலான கதை தான். அடுத்து வெளியான 'லவ் 24x7' படமும் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் நடித்த 'லைப் ஆப் ஜோஸுட்டி' படமும் அவருக்கு எந்தவிதத்திலும் கைகொடுக்க தயாராக இல்லை. மீண்டும் சோர்ந்துபோன திலீப்புக்கு எனர்ஜி டானிக் கொடுக்கும் விதமாக கடந்த வெள்ளியன்று கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான '2 கண்ட்ரீஸ்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்தவிதமாக திலீப்பிற்கு இந்த வருடம் மகிழ்ச்சியுடனேயே முடிவடைந்துள்ளது என்றே சொல்லலாம்..!