மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.தங்கசாமி. இதில் ராட்டினம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர், எட்டுத்திக்கும் மதயானை படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து விட்டு தற்போது சில படங்களில் அவருக்கும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதனால் வித்தியாசமான கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.
அதோடு, மீண்டும் தான் இயக்கும் புதிய பட வேலைகளிலும் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தார் கே.எஸ்.தங்கசாமி. அந்த படத்தையும் ராட்டினம் படம் போன்று புதுமுகங்களை வைத்து இயக்குவதாக கூறி வந்தார். ஆனால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுபற்றி இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியைக் கேட்டபோது, ''நான் இயக்கயிருந்த புதிய படத்தில் காதலின் இன்னொரு பரிமாணத்தை சொல்ல இருக்கிறேன். அந்த படத்திலும் ராட்டினம் படம் போன்று இரண்டு புதுமுகங்களையே நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தது. ஆனால், அந்த படத்தை தயாரிக்கயிருந்தவர் ஒரு பிரபல அரசியல் கட்சியை சேர்ந்தவர். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கயிருப்பதால் அதற்கான வேலைகளில் அவர் இறங்கி விட்டார். அதனால், தேர்தல் முடிந்த பிறகு படத்தை தொடங்கலாம் என்று அவர் கூறியதால், தற்காலிகமாக படப்பிடிப்பு வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறேன்'' என்கிறார்.