600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் இந்த மாதத் துவக்கத்தில் பலரது வாழ்க்கையையும் திருப்பிப் போட்டுவிட்டது. அந்த பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கிறார்கள். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்காக களமிறங்கி வேலை பார்த்து சென்னையில் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மனித நேயம் உருவாகக் காரணமாக இருந்தார்கள். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம், என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பலரும் சிந்தித்து அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் துறைகளிலும் ஆறுதல் தரும் பல விஷயங்களைப் பலர் செய்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி 'தி ரெய்ன் சாங்' அதாவது 'மழை பாடல்' என்ற ஒரு ஆங்கிலப் பாடலை உருவாக்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு பவதாரிணி இசையமைக்க பிரபல பாடகியான ஷாலினி சிங் பாடலை எழுதியுள்ளார். இருவரும் சேர்ந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முழு பாடலும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் மக்கள்தானே, மண்ணின் இசையை தமிழகத்தில் தந்த இளையராஜாவின் மகள் அதை தமிழிலேயே தந்திருக்கலாமே.