பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன், ''மாலை நேரத்து மயக்கம்'' என்ற படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பாளர் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணன், வாமிகா அறிமுகமாகிறார்கள், அம்ரித் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களும் புதுமுகங்கள் தான். வருகிற ஜனவரி 1ந் தேதி வெளிவருகிறது. இது ஆண்களின் சிக்கலான உணர்வுளை சொல்லும் படம் என்கிறார்கள்.
பெண் இயக்குனர் இயக்கிய படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், தொழில்நுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் படத்தை பற்றி கூறும் கீதாஞ்சலி "படத்தில் உள்ள சின்ன சின்ன விஷயங்களை பெரிதுப்படுத்தாதீங்க. படம் சொல்ற மெசேஜை பாருங்க" என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: எனது வாழ்க்கையில் 3 தருணங்கள் முக்கியமானது. செல்வாவை சந்தித்தது, குழந்தை பெற்றுக் கொண்டது, இந்த படத்தை இயக்கியது. செல்வா ஆரம்பத்தில் தன் கதையை எனக்கு தரத் தயங்கினார், பிறகு நம்பி கொடுத்தார். கடுமையாக உழைத்து படத்தை முடித்திருக்கிறோம். படத்தை பார்த்துவிட்டு செல்வா என்னை திட்டவில்லை பாராட்டினார். அதுவே எங்களுக்கு முதல் வெற்றி. படம் வெளிவரும்போது அதில் உள்ள சின்ன சின்ன விஷயங்களை பெரிதுப்படுத்தாமல் படம் சொல்லும் மேசேஜை பாருங்கள் என்றார் கீதாஞ்சலி.