தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லூசு பொண்ணே, எவன்டி உன்னை பெத்தான் -என முன்பு தான் எழுதி பாடிய பல பாடல்களில் பெண்களின் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு. ஆனால், யு-டியூப்பில் வெளியான பீப் சாங்கில் இன்னும் அதிகப்படியான கோபத்தை அவர் காட்டியிருந்தார். அதன்காரணமாக ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றது. இதனால் இந்த விசயம் பெரிய சர்ச்சையாகி தற்போது பலதரப்பில் இருந்தும் சிம்புவுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது. அதேசமயம், இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் அவர் அதுபற்றி மன்னிப்பு கேட்க முன்வரவில்லை, மாறாக சட்டப்படி தான் இந்த விசயத்தை சந்திக்க தயாராக இருப்பதாக கூறிவிட்டார்.
இந்த நிலையில், யு-டியூப்பில் இருந்து பீப் சாங்கை நீக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை யு-டியூப் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். அதோடு, அந்த பாடலில் இருக்கும் ஆபாச வார்த்தைகளை பீப் ஒலியினால் மறைக்கப்பட்டிருப்பதால் அந்த பாடலை நீக்குவதற்கான அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறிவிட்டார்களாம். இருப்பினும், அந்த பாடலை இளைஞர்கள் அதிகமாக கேட்டு வருவதால் எப்படியேனும் நீக்கி விட வேண்டும் என்று அடுத்தகட்ட நடடிக்கைகளை காவல்துறை துரிதப்படுத்தியுள்ளது.