இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஏகேஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வசந்தம், புதிய அலைகள், உழைக்கும் கரங்கள் என்ற மூன்று அணியினர் மும்முனைப்போட்டியில் ஈடுபட்டனர். அதிகாலை 8 மணியில் இருந்தே ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதையடுத்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். அதோடு, அந்த கல்யாண மண்டபத்தில் பலத்த போலீஸ் பந்தோபஸ்தும் போடப்பட்டிருந்தது. அடையாள அட்டை வைத்திருந்த வர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள் நடித்து பின்னர் சினிமாவில் கேரக்டர் நடிகையாக நடித்து விட்டு பல சீரியல்களை தயாரித்து நடித்தவரான குட்டி பத்மினியும் வாக்களிக்க வந்தார். மதியம் சுமார் 1 மணி அளவில் வாக்களிக்க வந்த குட்டிபத்மினியின் காலில் அடி பட்டிருந்ததால் கட்டு போட்ட நிலையில் சிலர் அவரை கைதாங்கலாக பிடித்தபடி வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர். ஆனால், வாக்களித்து விட்டு திரும்பும்போது அவரது காலில் வலி ஏற்பட்டதால், கைதாங்கலாககூட அவரால் நடக்க முடியவில்லை. அதனால் அவரது காரை வாக்குச்சாவடிக்கு அருகே கொண்டு சென்று குட்டிபத்மினியை ஏற்றி சென்றனர்.