அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சோஷியல் மீடியாக்களிலும் சில பீப்' பசங்கள் உலாவரத்தான் செய்கிறார்கள்.. சினிமா நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரடியாக உரையாட சோஷியல் மீடியாவை பயன்படுத்தி சகஜ பாணியில் வலம் வர முயற்சித்தாலும் இதுபோன்ற சில 'பீப்' நபர்கள், 'பீப்' வார்த்தைகளை வீசி அவர்களை காயப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை பார்வதி, தானும் காஞ்சனமாலாவும் 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தை பார்த்துவிட்டு வந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு ஆல்பிரெட் என்கிற 16 வயது இளைஞன் ஒருவன் அருவெறுக்கத்தக்க வார்த்தையை கமெண்ட்டாக பதிவிட்டிருந்தார்.
உடனே பதிலுக்கு ஆவேசம் காட்டவில்லை பார்வதி.. நிதானமாக ஆனால் நெத்தியடியாக பதில் தந்தார் பார்வதி.. இந்த தலைமுறையின் பண்பாடு தெரியாத 16 வயது இளைஞனுக்கு என் வாழ்த்துக்கள் என கூறியுள்ள பார்வதி, அவனை விட அவன் பிறந்த குடும்பத்தை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த சிறுவன் இப்போதிருந்தாவது நல்ல பழக்கங்களை கற்கவில்லை என்றால் காலமும் இந்த சமூகமும் அவனுக்கு நல்ல பாடத்தை கற்றுத்தரும். ஆனால் நிச்சயம் அது அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது” என அந்த 'பீப்' பையன் திருந்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக பதில் அளித்துள்ளார். .