‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
சிவா மனசுல சக்தி படம் தொடங்கி வாசுவும் சரவணும் ஒண்ணா படிச்சவங்க படம் வரை இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கிய அத்தனை படங்களிலும் சந்தானம்தான் காமெடியனாக நடித்திருந்தார். அப்படங்களில் சந்தானம் காமெடியன் என்றாலும், ஏறக்குறைய ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவத்தை சந்தானத்துக்கு கொடுத்து வந்தார் ராஜேஷ்.
வாசுவும் சரவணும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிய ராஜேஷ், தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாரை கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார்.
கடவுள் இருக்கான் குமாரு என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவிருக்கிறார். தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கும் இயக்குநர் ராஜேஷ், அதை முடித்த பிறகு கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளை முடிவு செய்ய இருக்கிறாராம்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சந்தானம் நடிக்கவில்லை. அவருக்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் பால சரவணன் நடிப்பார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏன் இந்தப்டத்தில் சந்தானம் நடிக்கவில்லை? அவர் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் சிவா தர மறுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சந்தானத்துக்கு பதில் பால சரவணனை ஓகே பண்ணிவிட்டதாக இயக்குநர் ராஜேஷ் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம், ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நண்பனாக நடித்தால் நன்றாக இருக்காது என்று சந்தானம் விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.