பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அனிருத் இசையில், சிம்பு எழுதி, பாடிய பீப் சாங் என்ற ஆபாச பாடல் தமிழ்நாட்டில் பல தரப்பினரிடமிருந்தும் கடும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில்சிம்புவை மன்னித்து விடலாம் என்று சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிம்பு பாடி பதிவு செய்து வேறு வரிகளை போட்டு நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பாடலை அவருக்கு தெரியாமல் பொதுமக்களிடம் வெளிச்சம்போட்டு காட்ட நினைத்து சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்திருக்கும் ஒரு குற்றவாளியின் செயலுக்கு சிம்பு பலியாகி அவமானப்பட நேர்ந்திருக்கிறது.
அவரது தந்தை டி.ராஜேந்தர் கண்ணீரோடும், கவலையோடும் இதற்கான விளக்கத்தை கூறியிருக்கிறார். தாயாரும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். இதற்குமேலும் இதுபற்றி பேசுவதும், எழுதுவதும் தொடர்கிறது. அவற்றுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும். சிம்பு பாடிய ஒரு ஆபாச பாடலுக்கு, ஒரு சிறு தவறுக்கு அவரை தண்டிக்க தேடுவதும், அவரை தொழில் முடக்கம் செய்வதும் நியாயமா? ஒரு ஆபாச வார்த்தையை உச்சரித்ததை தவிர வேறென்ன தவறு செய்து விட்டார். குண்டு வைத்தாரா? விமானம் கடத்தினாரா? பல பெண்களை அழித்தாரா?
தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பதே தெய்வப் பண்பு. நமது வீட்டில் சிறு குழந்தைகள் தவறு செய்துவிட்டால். தவறை மறந்து மன்னிப்பதில்லையா? சிம்புவின் தவறும் மன்னிக்கப்படுவதுதானே தவிர தண்டிக்கப்படுவதல்ல. பிரச்சினை நீதிமன்றம் சென்றிருப்பதால் அதனை சிம்புவும் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.