ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டார்லிங், யாகவராயினும் நாகாக்க படங்களில் நாயகியாக நடித்த நிக்கி கல்ராணியின் நடிப்பு அந்த இரண்டு படங்களிலுமே பேசும்படியாக இருந்ததால் தற்போது அவர், பாபி சிம்ஹாவுடன் கோ-2, ஜீவாவுடன் கவலை வேண்டாம், லாரன்சுடன் 'மொட்ட சிவா கெட்ட சிவா', விஷ்ணு நடிக்கும் புதிய படம் என பிசியான நடிகையாகி விட்டார் நிக்கி.
அதோடு இந்த படங்களில் ஏதோ டூயட், கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கதாநாயகியாக இல்லாமல், கதைக்கு சப்போர்ட் செய்யக்கூடிய கதாபாத்திரங்களிலும் நடிக்கிறாராம் நிக்கி கல்ராணி. இதையடுத்து நடிப்பதற்காகவும் பல கதைகளை கேட்டுள்ளார். அதன்காரணமாக, மலையாளம், தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வந்தபோதும், அடுத்தபடியாக தமிழுக்கு போக மீதமுள்ள நேரங்களில் மட்டுமே, மற்ற மொழிப்படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும், தற்போது இரண்டாம் தட்டு ஹீரோக்களுடனேயே நடிக்கும் நிக்கி கல்ராணிக்கு, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்கிற பெரிய ஆசை உள்ளதாம். அவர் நடித்த, மங்காத்தா, வீரம், வேதாளம் போன்ற படங்களை பலதடவை பார்த்து ரசித்ததாக கூறும் நிக்கி கல்ராணி, தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து அஜீத் மட்டுமின்றி, விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வராமல் ஓயமாட்டேன் என்று படப்பிடிப்பு தளங்களில் இருப்பவர்களிடம் தனது மனதில் இருக்கும் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார் நிக்கி.