பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் வெளியான பாஜிராவ் மஸ்தானி படம் பாக்ஸ் ஆபிஸ் பெரிய வசூல் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள், நடிகைகளுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது. இதில் ஒருபடிமேல் சென்று, பாஜிராவாக நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பாலிவுட்டின் பிதாமகர் என கருதப்படும் அமிதாப்பச்சன் கையில் இருந்து ஒரு சிறப்பு பரிசு கிடைத்துள்ளதாம்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்த ரன்வீர் சிங், தனக்கு அமிதாப் பச்சன் அவரது கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதத்தை அனுப்பியுள்ளார். எனக்கு எந்த பிரபலங்கள் பாராட்டுக் கடிதங்களை எழுதினாலும் அது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றே. அதனை நான் ப்ரேம் போட்டு வைப்பது மட்டுமல்லாமல், அதனை நான் வீட்டில் வைக்காமல் எனது பேங்க் லாக்கரில் வைப்பேன்.
அமிதாப் பச்சனின் இந்தக் கடிதமும் எனது பேங்க் லாக்கருக்கு செல்ல உள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனது கதாபாத்திரத்தையும் தனது நடிப்பையும் புகழ்ந்தும் ரசித்தும் அமிதாப் பச்சன் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.