ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷாலுடன் ஜோடி சேர்ந்த "தாமிரபரணி" பானு, தற்போது தமிழ் படங்கள் இல்லாது தவிக்கிறார். பரதம் கற்றிருந்தாலும், ஷோபி மாஸ்டருக்காவும், பிரசாந்தின் "பொன்னர் சங்கர்" திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு, பிரமாண்ட அரங்க அமைப்பில் ஆடி அசத்தினார். அதற்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரின் "சட்டப்படி குற்றம்" படத்திலும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, இவருக்கும் இவர் அப்பாவுக்கும் ஏற்பட்ட கருத்துப் பிரச்சனைகளை கடந்து, தமிழ் சினிமாவில் முகம் காட்ட தொடங்கியவருக்கு, வாய்ப்பு எனும் முகவரி இல்லாது போனது வருத்தமே. அப்படியே சில படங்கள் வந்தாலும் கிளாமரிலும், ஒற்றை பாடலுக்கு ஆட கேட்டு வந்த வாய்ப்பை அறவே மறுத்து, மலையாளம் நோக்கி திரும்ப சென்றார்.
அடித்தது லக், "ஈ திறக்கி நடே" என்ற மலையாளப் படத்தில், அனில் இயக்கத்தில், வினுமோகனுடன் நடித்து கொண்டிருக்கிறார், மிகவும் பக்குவமுள்ள குடும்ப பெண்ணாக அமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் சந்தோஷமாம். இனி நான் நடிக்கும் எந்த மொழி படமாக இருந்தாலும், தரமான ரோலாகவே நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் தாமிரபரணி பானு.