தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஆட்டோ ஜானி திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் இரண்டாம் பாதி தனக்கு திருப்திகரமாக இல்லை எனக் கூறி சிரஞ்சீவி ஆட்டோ ஜானி படத்தை நிராகரித்து விட்டார். தற்போது கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
சிரஞ்சீவி மறுத்த ஆட்டோ ஜானி படத்தின் கதையை நடிகர் ரவி தேஜாவிடம் பூரி ஜெகன்நாத் கூறியுள்ளார். அதைக் கேட்டு விருப்பம் கொண்ட ரவி தேஜா முழு திரைக்கதையையும் தயார் செய்து வருமாறு பூரி ஜெகன் நாத்திடம் கூறியுள்ளாராம். அண்மையில் லோபர் படத்தை வெளியிட்ட பூரி ஜெகன் நாத் அடுத்ததாக ரோக் என்ற படத்தை இயக்கி வருகின்றார்.
இந்நிலையில் ரவி தேஜாவின் விருப்பப்படி பூரி ஜெகன்நாத்தும் கதையை தயார் செய்து அவரைச் சந்திக்க காத்திருக்கின்றாராம். பெங்கால் டைகர் படத்தில் நடித்த ரவி தேஜா அப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் எவடு ஒக்கடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். அட்டோ ஜானி படத்தின் முழு கதையும் ரவி தேஜாவிற்கு பிடித்துவிட்டால் உடனே அப்படத்தின் வேலைகள் துவங்கப்படும் என கூறப்படுகின்றது.