சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெர்ரி படங்களைத் தொடர்ந்து பாடலாசிரியர் பா.விஜய் நடித்துள்ள படம் நையப்புடை. விஜயகிரண் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தான் நடித்திருப்பதைப்பற்றி பா.விஜய் கூறுகையில்,
இந்த நையப்புடை படத்தில் கதையின் நாயகன் என்றால் அது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான். இளையதளபதி விஜய்க்கு இணையாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆக்சன் செய்தது, நடனமாடியது, காரில் இருந்து கீழே உருண்டது எல்லாமே அவராகவே செய்தார். இந்த படத்தில் நடித்ததினால் எனக்கு என்ன சந்தோசம் என்றால், எஸ்.ஏ.சி என்ற நல்ல சகோதரர் கிடைத்திருக்கிறார். அவரது வயதை மறந்து விட்டால் அவர் எனக்கு சகோதரர்தான். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியபோது அன்போடு, நட்போடு, மரியாதையோடு நடந்து கொண்டார். ஒவ்வொரு நாளும் ஒரு படி அன்பு மேலாக, நட்பு மேலாக சகோதரத்துவத்துடன் இந்த நையப்புடை படம் முழுக்க அவருடன் பயணித்துள்ளேன்.
பொதுவாக படங்களில் ஹீரோ ஹீரோயினுக்குரிய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகியிருப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கும், எஸ்.ஏ.சிக்குமிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகியுள்ளது. நிறைய காம்பினேசன் சீன்கள் உள்ளன. அவரை பெரிய டைரக்டராக மட்டுமே தெரிந்திருந்த நான் இந்த படம் மூலம் அவருக்குள் இருந்த ஒரு பெரிய மனிதரையும் அறிந்தேன். ஒவ்வொரு ஷாட் இடைவெளியிலும் ஒரு ஆன்மீக விளக்கம், தியான பயிற்சி பற்றி சொல்வார்.
மேலும், ஸ்ட்ராபெர்ரி படம் முடிந்த பிறகுதான இந்த படத்தில் என்னை நடிக்கஅழைத்தனர். இதில் ஒரு நியூஸ் ரிப்போர்ட்டராக நடிக்கிறேன். இப்படியொரு வேடத்தில் நடிக்க வேண்டும என்பது எனது நீண்டநாள் ஆசை. அது இந்த படத்தில் நிறைவேறியிருக்கிறது. ஒரு ஆக்சன் கதைக்குள் ஒரு ரிப்போர்ட்டர் பயணிப்பது. எனக்கு நல்லதொரு ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது என்கிறார் பா.விஜய்.