'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மம்முட்டி, மோகன்லால் அளவிற்கு சுரேஷ்கோபி அவ்வளவு ஆக்டிவாக படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாகவே இதே கதைதான் தொடர்கிறது. இந்த வருடத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் ஐந்து படங்கள் வெளியானாலும், அவற்றில் இரண்டு படங்களில் சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்திருந்தார்.. மற்ற மூன்று படங்களில் ஒன்று தான் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ'. இந்த வருட ஆரம்பத்திலேயே அமர்க்களமான வில்லனாக தன்னை வெளிப்படுத்தி ஆச்சர்யம் காட்டினார் சுரேஷ்கோபி.
ஆனால் மலையாள படங்களில் அவளவாக கவனம் செலுத்தவில்லை என்கிற உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சிபு கங்காதரன் என்பவர் இயக்கத்தில் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்தில் ஒரு துறவியாக நடித்த சுரேஷ்கோபி, இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என ஆளே மாறினார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அவரது கெட்டப்பையும் கேரக்டரையும் மிரட்டலாக காட்டியது. ஆனால் படம் ரசிகர்களை வசீகரிக்கவில்லை. அடுத்து வெளியான 'மை காட்' படமும் கூட ஏதோ வந்தோம், போனோம் என்கிற விதமாக தடம் தெரியாமல் போய்விட்டது. தற்போதைய நிலவரப்படி சுரேஷ்கோபி வேறு எதுவும் படங்களில் நடிப்பதாக தகவல் இல்லை.. அந்த வகையில் கிட்டத்தட்ட சினிமாவை விட்டு அவராகவே வெளியேறிக்கொண்டு இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.