அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தென்னிந்தியத் திரையுலகில் இரண்டு இயக்குனர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்றவர்கள்தான். ஒருவர் ஷங்கர், மற்றொருவர் ராஜமௌலி. ஷங்கர் ரஜினிகாந்தை வைத்து ஏற்கெனவே சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கி விட்டார். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது.
ஆனால், பாகுபலி படத்தின் மூலம் தரத்திலும், வசூலிலும் ஹிந்திப் படங்களுக்கும் சவால்விட்ட இயக்குனர் ராஜமௌலி இன்னும் ரஜினிகாந்தை இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜமௌலி கலந்து கொண்டு பேசியதன் வீடியோவை சில தினங்களுக்கு முன்தான் ராஜமௌலி அவருடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான அந்த நிகழ்வில் அவர் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கினார் என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் அதிரடியானது. “அவருக்கு நான் என்ன கதாபாத்திரம் கொடுப்பேன்னு தெரியாது, ஆனால், படம் வெளியாகி பத்து நாள் வரைக்கும் அவர் என்ன வசனம் பேசறார்னு யாராலயும் கேக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களோட ஆரவாரம்தான் அதிகமா இருக்கும் என்று பதிலளித்துள்ளார்.
அப்படி ஒரு ஆர்பாட்டமான படத்தைத்தான் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜமௌலியின் பாகுபலி 2க்குப் பிறகு ரஜினியின் 2.0க்குப் பிறகு இருவரும் இணைவார்களா ?