ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பீப் பாடல் தொடர்பான சர்ச்சையில் சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் இருவர், அவரது வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், அனிருத் இசையமைப்பில், சிம்பு எழுதி, பாடிய பீப் பாடல் ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் கொச்சையான வார்த்தைகளால் வெளியாகியுள்ள இந்த ஆபாச பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிம்பு மற்றும் அனிரூத் மீது வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. மேலும் சிம்புவின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே இந்தப்பாடலை தான் வெளியிடவில்லை என்றும் யாரோ திருடி வெளியிட்டு விட்டதாகவும் கூறியுள்ள சிம்பு, எனது வீட்டு கழிப்பறையில் நான் பாடும் பாடலுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயம் அல்ல என்று கூறினார்.
ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி : எதிர்ப்பு ஒருபக்கம் இருக்க சிம்புவுக்கு ஆதரவாகவும் அவரது ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இன்று சிம்புவின் தி.நகர் முன்பு கூடிய சிம்புவின் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
திடீரென ரசிகர்கள் இருவர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்தனர். சிம்பு இந்தப்பாடலை வெளியிடவில்லை யாரோ திருடி வெளியிட்டுவிட்டார்கள், அவர் மீது குற்றம் சொல்வது நியாயம் அல்ல என்று கூறினர்.