'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சேரன் பாண்டியன், நாட்டாமை, முத்து, படையப்பா, தெனாலி, தசாவதாரம், லிங்கா உள்பட பல ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். மேலும், தமிழ், தெலுங்கில் மட்டுமே படங்கள் இயக்கி வந்த கே.எஸ்.ரவிக்குமார், ஹரி இயக்கிய சாமி படத்தை இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் சஞ்சய் தத்தை நாயகனாக வைத்து இயக்கினார்.
பின்னர் ரஜினி நடித்த லிங்கா படத்தை இயக்கியவருக்கு அந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமையவே, கன்னட நடிகர் சுதீப்பை வைத்து இப்போது முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடிக்கிறார். இதுவரை கிளாமர் ஏரியாவுக்கு செக்போஸ்ட் வைத்திருந்த நித்யா இந்த படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடிக்கிறாராம்.
அதோடு, நித்யாமேனன் அறிமுகமானதே கன்னட சினிமாவில்தான், 2006ல் செவன் ஓ கிளாக் என்ற படத்தில் நடித்த அவர் பின்னர் பல கன்னட படங்களில் நடித்திருப்பதால் அங்கு அவருக்கு ஒரு ரசிகர் வட்டம் உள்ளதாம். அதனால் நித்யாவை படத்தில் ஓப்பன் செய்யும் காட்சியில் முன்னணி ஹீரோக்களுக்கு கொடுப்பது போன்று பில்டப் கொடுத்து ஓப்பன் செய்கிறாராம் ரவிக்குமார். அந்த வகையில், குஷி படத்தில் மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது -என்று ஜோதிகா என்ட்ரி கொடுத்தது போன்று இந்த படத்தில் நித்யாமேனனும் இளவட்டங்களை கவரும் ஒரு பாடலோடு என்ட்ரி கொடுக்கிறாராம்.