Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீப் சாங்கிற்கும் அனிருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை : சிம்பு பேட்டி

20 டிச, 2015 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Simbu-interview-on-beep-song-issue

பெண்களை அவமதிக்கும் விதமாக பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவர்கள் மீது கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேற்று ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பும், அனிருத்தும் போலீசிற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் பீப் சாங் விவகாரம் தொடர்பாக தனியார் டிவி ஒன்றிற்கு சிம்பு, போன் மூலம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் சிம்பு கூறியதாவது : எந்த படத்திலும், டிவி.,யிலும் வெளியிடாத பாடல் சர்ச்சை ஆக்கப்பட்டு என்னை கேள்வி கேட்பது ஏன் என தெரியவில்லை. இது என்னுடைய பாடல் தான். நான் தான் பாடினேன். தமிழ் சினிமாவை பொறுத்த வரை அப்போது என்ன வார்த்தை தோன்றுகிறதோ அதை வைத்து டம்மியாக பாடல் இயற்றுவது வழக்கமானது தான். இது போல் என் வீட்டில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன.பொதுவாக எல்லா காதல் தோல்வி பாடல்களும் பெண்களை திட்டி தான் எழுதப்பட்டிருக்கிருக்கும். ஆனால் அது தவறு, காதல் தோல்வி பெண்களின் குற்றமல்ல. ஆண்களின் தவறான தேர்வு தான் காரணம். உனக்கான பெண்ணை கடவுள் உனக்கு கொடுப்பார் என்பது போன்று தான் இந்த பாடலை நான் பாடி உள்ளேன்.


பெண்களை அவமதிக்கும் விதமாக நான் அந்த பாடலை எழுதவில்லை. ஜாலியாக, டம்மியாக அந்த பாடலை தயார் செய்து வைத்திருந்தேன். இறுதிப்படுத்தபடாமல் என் வீட்டில் வைத்திருந்த பாடல் அது. இன்றைய டெக்னாலஜி வளர்ச்சியில் அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கூட காட்ட முடியும். இதற்கும் அனிருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது என்னுடைய பாடல். அவரை இதில் இழுக்க வேண்டிய அவசியம். நான் எந்த படத்திலாவது இந்த பாடலை வெளியிட்டு, நீங்கள் கேள்வி கேட்டால் சரி. ஆனால் இறுதிப்படுத்தி, வெளியிடாத பாடலை வெளியிட்டு என்னிடம் கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்.


இந்த பாடலை அதிகாரப்பூர்வமாக நான் வெளியிட்டிருந்தால் இந்த பிரச்னைகள், கேள்விகள் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் எதற்கும் பயப்படுபவன் அல்ல. நான் கடவுளுக்கு மட்டும் தான் பயப்படுவேன். காதல் தோல்வி பாடல்களில் வெட்டுறா அவள, குத்துடா அவளனு எழுதுகிறார்கள் அவர்களை யாரும் கேள்வி கேட்பவில்லை. ஆனால் நான் பெண்களை திட்டாதே என நல்ல விஷயத்தை கூறியதற்கு கேள்வி பிரச்னை ஆக்குகிறார்கள்.எனக்கு அதிகமாக பெண் ரசிகைகள் தான் உள்ளனர். என் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக இதை வேண்டுமென்றே திரித்து வெளியிட்டுள்ளனர். சிம்பு என்ற தனிமனிதனை குறிவைத்தே இந்த பிரச்னை கிளப்பப்பட்டுள்ளது.


என்னை பற்றி பல அவதூறுகள் பரப்பப்பட்ட பிறகும் நான் சிம்புவாக உங்கள் முன் இருப்பதற்கு ரசிகர்கள் தான் காரணம். மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பப்ளிசிட்டிக்காக இது போல் செய்ய வேண்டிய அவசியமில்லை. என் வீட்டிற்குள் தண்ணீர் வந்து, இன்டர்நெட், மொபைல் என எந்த வசதியும் இல்லாத போதும் மாடியில் நின்று போனில் பேசி பலருக்கும் உதவியவன் நான். சிம்பு என்றால் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாதா? நான் பப்ளிசிட்டி செய்ய. குழந்தையாக இருந்தது முதல் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். அம்மா சொல்வதற்காக பாடல் புத்தகத்தையும், அப்பா சொல்வதற்காக டைலாக் புத்தகத்தையும் படித்து வளர்ந்தவன் நான்.


இப்போது சினிமா துறையில் எனக்கு யாரும் ஆதரவு இல்லை. ஆனால் தமிழ் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் குடும்பத்தின் ஆதரவு எனக்கு இருக்கு. நான் தவறாக ஏதாவது செய்திருந்தால் முதலில் என்னை திட்டுபவர்கள் அவர்களாக தான் இருக்கும். யாரோ 10 பேர் சொல்வதை கேட்டுக் கொண்டு என் உருவபொம்பை எரிப்பது போன்று செய்கிறார்கள். அப்படி நான் என்ன தவறு செய்து விட்டேன்? பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி இன்று வெளியோ வர போகிறான். அதிகாரப்பூர்வமாக நான் வெளியாட பாடலை வைத்துக் கொண்டு என்னை கேள்வி கேட்கிறார்கள். பலர் அந்த அந்த பாடலை என்னவென்றோ கேட்காமல், அதில் என்ன உள்ளது என்று தெரியாமலேயே என் எதிர்க்கிறார்கள். இவ்வாறு சிம்பு கூறி உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in