'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் மனீஷா யாதவ். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பனும் பாண்டியா, திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்தவர், இப்போது ஒரு குப்பைக்கதை என்ற படத்தில் சேரிப்பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்று தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார் மனீஷா. அவரது நடிப்பு குறித்து சம்பந்தப்பட்ட படக்குழுவினர் பெருமையாக பேசி வருகின்றனர்.
ஆனபோதும் அதையடுத்து அவருக்கு எந்த புதிய படமும் கிடைக்கவில்லை. திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் போன்ற கிளாமர் கதைகள் கிடைத்தாலும் நடிப்பதற்கு அவர் தயாராக இருந்தபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மாதக்கணக்கில் சென்னையில் வெறுமையாக டேரா போட்டிருந்த மனீஷா யாதவ் இப்போது பெங்களூர் சென்று ஒரு டிசைனிங் ஷோரூம் திறந்திருக்கிறார்.
அதேசமயம், முழுசாக அவர் சினிமாவை விட்டு வெளியேறவில்லையாம். சரியான படங்கள் கிடைக்கும்போது வந்து விடுவாராம். அதோடு, தமிழ் படங்களுக்காக மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதற்காகவும் சில மேனேஜர்களை முடுக்கி விட்டிருக்கும் மனீஷா யாதவ், தமன்னா உள்ளிட்ட சில கவர்ச்சி நாயகிகளை முன்வைத்து அவர்கள் அளவுக்கு கவர்ச்சி சேவையாற்ற தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.