வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பீப் ஸாங் என்ற ஆபாசப்பாட்டை உருவாக்கிய சிம்பு, அனிருத் இருவரையும் கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சிம்புவுக்கு தன்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது குறித்த செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது மற்றொரு பிரபல எழுத்தாளரான 'க்ரைம்' நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரும் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் சிம்பு, அனிருத் இருவரையும் கண்டித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்..
“முதல்-அமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டில் சிம்புவும், அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும், அதை நியாயப்படுத்தவும் துணிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட துணிச்சலை முதல்-அமைச்சர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். நாட்டையே தாயாக எண்ணி அதற்கு பாரத மாதா என்ற அழகான பெயர் சூட்டி நேசித்து வருகிறோம்.
சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றை கூட சுவாசிக்க தகுதியற்றவர்கள். பெண் என்பவள் உடம்பால் மென்மையானவள். ஆனால் உள்ளத்தால் இரும்பை போன்றவள். ஒவ்வொரு பெண்ணும் பூவில் செய்த ஒரு ஆயுதம் என்பதை சிம்பு போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.”
என்று ராஜேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.