ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
வம்சம், சிவரகசியம், அதே கண்கள், ஆபீஸ் என 20-க்கும் மேற்பட்ட மெகா தொடர்களில் நடித்திருப்பவர் ஈஸ்வர். தற்போது கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும், பாசிட்டீவ், நெகடீவ் என மாறுபட்ட வேடங்களில் நடித்து எல்லாவிதமான கேரக்டர் களுக்கும் பொருந்தக்கூடிய நடிகராக சின்னத்திரையில் முத்திரை பதித்து வருகிறார் ஈஸ்வர்.
தினமலர் இணைதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது அவர் அளித்த பதில்கள் வருமாறு...
ஒரு நடிகரை ஒரேமாதிரியான வேடங்களில் பார்க்க எப்படி ரசிகர்களுக்கு போரடிக்குமோ அதேபோல்தான் எனக்கும் ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பது பிடிக்காது. அதன் காரணமாக ஒரு சீரியலில் ஹீரோவாக நடித்தால் இன்னொரு சீரியலில் கொடூரமான வில்லனாக நடிக்கிறேன். அந்த வகையில் ஒருதரப்பினர் என்னை புகழ்ந்து பேசினால், இன்னொரு தட்டு ரசிகர்கள் என்னை பயங்கரமாக திட்டுவார்கள். அந்த மாதிரியான சீரியல்களாகத்தான் தற்போது நான் நடித்து வருகிறேன். குறிப்பாக, சேலஞ்சிங்கான வேடங்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறேன். அந்த வகையில், விஸ்வரூபம் கமல் மாதிரி நல்லவன்-கெட்டவன் என ரெண்டும் கலந்தவன் நான்.
மேலும், நான் வில்லனாக நடிக்கும் சில சீரியல்களில் பொம்பளை பொறுக்கியாக நடிக்கிறேன். சில சீரியல்களில் பொம்பளைங்களை ரேப் பண்ற மாதிரியான கொடூர வில்லனாகவும் நடிக்கிறேன். அதனால் பேஸ்புக், யு டியூப் போன்ற சமூக வலைதளங்களில் என்னை திட்டித்தீர்க்கிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் திட்டுவதை நினைத்து நான் பீல் பண்ணவில்லை. மாறாக சந்தோசப்படுகிறேன். அது அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அவர்கள் மனதில் நான் அந்த அளவுக்கு போய் உட்கார்ந்திருப்பதினால்தான் அப்படி திட்டுகிறார்கள். அந்த வகையில், ரசிகர்களின் ஒவ்வொரு திட்டும் எனக்கு ஒவ்வொரு விருது கிடைத்த மாதிரிதான் பீல் பண்ணுகிறேன்.
இப்படி சீரியல்களில் காம வெறி பிடித்தவனாக நடித்தபோதும், நிஜத்தில் நான் பெண்களை ரொம்ப மதிப்பவன். நல்ல பையன். நிறைய பேசுவேன். குறும்பான பையன். அதனால் எனது நிஜ கேரக்டர் தெரிந்தவர்களுக்கு என்னை கொடூரமான வில்லன் வேடங்களில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கும். அந்த அளவுக்கு நடிப்புக்காக என்னை முழுசாக மாற்றிக்கொண்டு வருகிறேன். அதோடு, சீரியல்களைப் பொறுத்தவரை பெண்களின் ராஜ்ஜியமாக இருந்தபோதும், நான் நடிக்கிற சீரியல்களில் எனக்கும் அவர்களை மாதிரியே முக்கியத்துவம் தருகிறர்கள். அது ரொம்ப சந்தோசமாக உள்ளது. நடிக்கிற கேரக்டர்கள் திருப்தியாக உள்ளது.
ஹீரோ-வில்லன் தவிர இன்னும் எந்தமாதிரியான வேடங்களில் நடிப்பீர்கள்? என்று கேட்டால்,
என்னைப்பொறுத்தவரை ஹீரோ, வில்லன் தவிர அண்ணன், தம்பி, ப்ரண்ட் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த கேரக்டர் சீரியல் முழுக்க வரக்கூடிய சேலஞ்சிங்கானதாக இருக்க வேண்டும். சும்மா வந்து போறது போல் இருக்கக் கூடாது. ஆண்டவன் புண்ணியத்தில் இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டேன். இருப்பினும் சீரியல்களில் ஏதாவது வேடங்களில் நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும். காரணம், ரெண்டு வாரம் வரலேன்னா மறந்து விடுவார்கள் நேயர்கள். அதனால் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன்.
இப்படி சொல்லும் ஈஸ்வரிடத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளதா? என்று கேட்டால்,
சினிமாவில் நடிக்க இதுவரை முயற்சி எடுக்கவில்லை. சீரியல்களே பிசியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சினிமாவில் வில்லன் வேடம் கிடைத்தால் சந்தோசமாக நடிப்பேன். தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் வில்லன்கள் ரொம்ப குறைவு. அதனால்தான் மும்பையில் இருந்து வில்லன்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், பாட்ஷாவில் நடித்த ரகுவரனுக்கு பிறகு அவர் இடத்தை நிரப்ப இங்கு வில்லன்கள் இல்லை. அதனால் எனக்கு சினிமாவில் வில்லன் வேடங்கள் கிடைத்தால் அவர் இடத்தை நிரப்ப முயற்சி செய்வேன் என்கிறார் ஈஸ்வர்.