சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திற்கு பிறகு பிந்துமாதவியின் மார்க்கெட் மந்தமாகி விட்டது. இருப்பினும் சூர்யா தயாரித்துள்ள பசங்க-2 படத்தில் நடித்திருக்கும் அவர், சிபிராஜின் ஜாக்சன் துரை படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும், முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தால்தான் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என்பதால் சில முன்னணி நடிகர்களின் படங்களுக்காக தொடந்து கல்லெறிந்து வந்த பிந்துமாதவி, அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் விக்ரமை வைத்து இயக்கும் மர்மமனிதன் படத்தில் கமிட்டாகியிருந்தார்.
இந்த படத்தில் நயன்தாரா முக்கிய நாயகியாக நடிக்க இரண்டாவது நாயகியாக பிந்து மாதவி நடிக்கயிருந்தார். ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து பிந்துமாதவியை நீக்கி விட்டு நித்யாமேனனை இணைத்திருக்கிறார்கள். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார் பிந்துமாதவி. பல மாதங்களாக போராடி கைப்பற்றிய படத்தை நித்யா கைப்பற்றி விட்டாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். இருப்பினும், விரைவில் வெளியாகயிருக்கும் பசங்க-2 படம் வந்தால் தனக்கு புதிய படங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டுள்ளார்.
அதோடு, மார்க்கெட்டில் தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்தது போன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராகயிருக்கிறார் பிந்துமாதவி.