இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிம்புவும், அனிருத்தும் இணைந்து உருவாக்கிய ஆபாசப்பாடல் உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பெண்களும் சமூக அமைப்புகளும் போராட்டம் வருகின்றனர். இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தும் வருகின்றனர். பெண்களை இழிவு செய்த இவர்களின் செயல் குறித்து திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். நடிகர் சங்கமும் அமைதியாக இருக்கிறது.
சிம்பு அனிருத் செயலுக்கு எதிராக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் எதிர்ப்பை தெரிவித்தார். அடுத்து பா.விஜய் கடுமையாக கருத்து கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்துவோ, 'பாடல் எழுதுபவர்கள் தங்களுக்கு தாங்களே தணிக்கைக்குழு அமைத்துக்கொள்ள வேண்டும்' என்று பட்டும்படாமல் சொல்லி கருத்து சொல்லி இருந்தார்.
இந்நிலையில் அனிருத்தின் உறவினரும், பிரபல காமெடி நடிகருமான ஒய்ஜி மகேந்திரன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,
“தமிழ் சினிமா பாடல்களில் மற்றுமொரு சர்ச்சை. தான் இந்தப் பாடலுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என அனிருத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இப்படியொரு நான்சென்ஸான பாடலுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அசிங்கத்தில் எந்தவிதமான சென்ஸும் இல்லை. மெலடியும் இல்லை. பீப் சத்தத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு குழந்தைகள் பெரியவர்களை தர்மசங்கடப்படுத்தக்கூடும்.
இப்படியொரு பாடலுக்கு என்ன அவசியம்? இப்படியொரு அசிங்கத்தை வியாதி பிடித்த மனதால் மட்டுமே சிந்திக்க முடியும். கண்ணதாசன் தன் கல்லறையில் நெளிந்து கொண்டிருப்பார். யாரையும் குறை சொல்வதற்கு முன்பாக இப்படியொரு கோரமான பாடலுக்கு யார் பொறுப்பு எனக் கண்டுபிடித்து அவர்களைத் தூக்கில் தொங்கவிட வேண்டும்.” என்று படு காட்டமாக கருத்து தெரிவிதுள்ளார்.
சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தன் மகனை காப்பாற்ற பொய் மேல் பொய் சொல்லி வருகிறார். அனிருத்தின் அங்கிளான ஒய்ஜி மகேந்திரனோ தவறு செய்திருந்தால் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
வெரிகுட்..!