ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நித்யா மேனன் தமிழில் நடித்த 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் ராசியில்லாத நடிகையாக இருந்தார். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் வெற்றியடைந்த பிறகு இந்த நிலைமை மாறியது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவுடன் தற்போது '24' படத்தில் நடித்து முடித்துள்ளார் நித்யா மேனன்.
24 படத்தை முடித்த பிறகு, தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப்புக்கு ஜோடியாக 'முடிஞ்சா இவனப் புடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து 'அரிமா நம்பி' பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் நித்யா மேனன்.
விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை 'புலி' படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான ஷிபு தமீன் தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இரண்டாவது நாயகியாக நித்யா மேனன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் மூலம் விக்ரமுடன் முதன் முதலாக ஜோடி சேரவிருக்கிறார் நித்யா மேனன். இந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் நித்யா மேனன்.