மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்க தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் பசையான தயாரிப்பாளர்கள் இல்லாமல் போய்விட்டனர். இப்படியொரு சிக்கல் நிலவுவதால் தாங்களே சொந்தப்படம் எடுப்பது அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்பில் நடிப்பது என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். கபாலி படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் எந்திரன்-2 படத்தை லைகா புரடக்ஷன்ஸ் என் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிக்கிறது.
எந்திரன் 2 வை முடித்ததும், கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனின் லட்சியப்படமான 'மருத நாயகம்' படம் பல வருடங்ளுக்கு முன் தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், பின்பு கிடப்பில் போடப்பட்டது. மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால்தான் தற்காலிகமாக அந்தப் படத்தை நிறுத்திவைத்துள்ளதாக அவ்வப்போது கமல் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் சுமார் 18 வருடத்திற்கு பிறகு லைகா புரொடக்ஷன் நிறுவனம் மூலம் மீண்டும் மருதநாயகம் படத்துக்கு உயிர் வந்துள்ளது. எந்திரன் - 2 படம் டேக் ஆப் ஆனதும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாக உள்ளது.