Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கேரக்டர்களை பிரித்துப் பார்ப்பதில்லை!- சரவணன் மீனாட்சி பவித்ரா பேட்டி

14 டிச, 2015 - 12:39 IST
எழுத்தின் அளவு:
I-cant-split-characters-says-Saravanan-Meenakshi-Pavithra

ஆபீஸ், கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய தொடர்களில் நடித்த பவித்ரா, தற்போது சரவணன் மீனாட்சி, லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இதில் சரவணன் மீனாட்சி தொடரில் அவர் நடித்து வரும் துளசி கேரக்டர் பேசப்பட்டு வருகிறது. அதோடு நேயர்கள் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பினைப் பார்த்து மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் பவித்ரா.


இதுபற்றி பவித்ரா கூறுகையில், நான் ஒவ்வொரு தொடர்களில் கமிட்டாகும்போதும் இந்த கேரக்டரில் சிறப்பாக நடித்து நேயர்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்றுதான் நினைப்பேன். அது சிறிய வேடமாக இருந்தாலும் எனக்கு தரப்படும் கேரக்டர்களில் முழுஈடுபாட்டுடன் நடிப்பேன். அந்த வகையில், நான் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டருமே எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளன. அதனால் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய நான் இப்போது சீரியல் நடிகையாக பிசியாக இருக்கிறேன்.


மேலும், என்னைப்பொறுத்தவரை பாசிட்டிவ், நெகடீவ் என்று கேரக்டர்களை பிரித்துப்பார்ப்பதில்லை. எந்த மாதிரியான வேடம் என்றாலும் அதற்கேற்ற நடிப்பை கொடுப்பேன். என்றாலும் நாட்டியான வேடங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதி. நான் எதிர்பார்ப்பது போன்ற அந்த வேடம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அதேசமயம், என்னை அமைதியான வேடங்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிற அதே நேரத்தில் லட்சுமி வந்தாச்சு தொடரில் தேவிப்பிரியாவுடன் எதிரும் புதிருமான வேடத்தில் நடிக்கிறேன். எங்களுக்கிடையே எப்போதுமே சண்டை வந்து கொண்டேயிருக்கும். அடுத்து சரவணன் மீனாட்சியில் கலகலப்பான வேடத்தில் ஜாலியான கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன்.


இப்படி சொன்ன பவித்ராவிடத்தில் சரவணன் மீனாட்சி தொடர் முற்று பெற இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஆயிரம் எபிசோடுகளை தாண்டி இப்போதும் நல்ல டிஆர்பியில் போய்க்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கான நேயர்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதனால் சரவணன் மீனாட்சி இப்போதைக்கு முற்றுபெற வாய்ப்பே இல்லை என்று கூறும் பவித்ராவுக்கு ரோல் மாடல் என்று யாரும் இல்லையாம். அதேசமயம் சீரியலைப் பொறுத்தவரை சரவணன் மீனாட்சி முதல் சீசனில் மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவின் நடிப்பும், ஆபீஸ் தொடரில் நடித்த ஸ்ருதிராஜின் நடிப்பும் ரொம்ப பிடிக்கும் என்கிறார்.


அவரிடத்தில், சினிமா ஆர்வம் குறித்து கேட்டால், சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளது. ஆனால் டீசன்டான வேடங்கள் வந்தால் நடிப்பேன். இதுவரை சினிமா வாய்ப்புகள் வரவில்லை. நல்ல வாய்ப்புகளை வரவேற்கிறேன் என்கிறார் பவித்ரா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in