ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்த மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் தங்களால் இயன்ற வழிகளில் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக சுஹாசினி மணிரத்னம் நடத்தும் நாம் இயக்கத்தின் சார்பில் சுஹாசினியும், மணிரத்னமும் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
இதன் அடுத்த கட்டமாக இந்த அமைப்பின் சார்பில் சூர்யா நகர் என்ற பகுதியை தத்தெடுத்துள்ளார். இந்த பகுதியினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது. உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது, அரசின் நிவாரண பணிகளை பெற்றுத் தருவது, கழிப்பிடம், சாலை வசதிகளை மேம்படுத்தித் தருவது. மாணவ மாணவிகளின் கல்விக்கு தேவையான உதவிகள் செய்வது என அனைத்து பொறுப்புகளை நாம் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சூர்யா நகர் மக்களுடன் கலந்தாலோசித்து பணியாற்றி வருகிறார் சுஹாசினி.