ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு வந்த லட்சுமிமேனன், தமிழில் பிரபலமான பிறகு மீண்டும் மலையாளத்தில் அவதாரம் என்ற படத்தில் திலீப்புடன் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் சம அளவு கவனம் செலுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அவதாரம் லட்சுமிமேனனுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் இப்போது முழுநேர தமிழ் நடிகையாகி விட்டார். அவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்று வந்தபோதும் இன்னும் பரபரப்பான நடிகையாகவில்லை. வேதாளம் படத்திற்கு பிறகு ஜெயம்ரவியுடன் மிருதன் படத்தில் நடித்து வருபவர், அடுத்து ஜெமினிகணேசன் படத்தில் நடிக்கிறார்.
அவரிடத்தில், அடுத்தபடியாக தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கும் ஆர்வம் உள்ளதா? என்ற கேட்டால், ஒரு நடிகையாய் எல்லா மொழிப்படங்களிலும் நடித்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும், என்னைப்பொறுத்தவரை இப்படித்தான் நடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு வைத்திருக்கிறேன். அதை மீறி பக்கா கமர்சியல் நடிகையாக என்னால் மாற முடியாது. அதனால், தற்போது தமிழில் கிடைத்து வருவது போன்று குடும்பப் பாங்கான வேடங்கள் தொடர்ந்து கிடைத்தாலே போதுமானது என்று நினைக்கிறேன். மற்றபடி தெலுங்கு, இந்தியில் நடிக்கிற ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை என்கிறார் லட்சுமிமேனன்.