ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக கிராமத்து கதைகள் என்றாலே மதுரைக்கு சென்றுதான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். குறிப்பாக, மதுரை மண்வாசனை கதைகள் என்றால் முழுப்படப்பிடிப்பையும் மதுரையை சுற்றியுள்ள ஊர்களில்தான் நடத்துகிறார்கள். அதோடு அந்த ஏரியா மக்களையும் நடிக்க வைக்கிறார்கள். ஊர் பஞ்சாயத்து, திருவிழா காட்சிகள் என்றால் லாரிகளில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கொண்டு இறக்குவதில்லை. அங்கு படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தை வைத்தே எளிதாக படப்பிடிப்பு நடத்தி விடுகிறார்கள்.
அந்த வகையில், விமலுடன் நந்திதா ஜோடி சேர்ந்து நடித்துள்ள அஞ்சல படத்தின் மொத்த படப்பிடிப்பும் மதுரை, தேனி பகுதிகளில்தான் நடந்துள்ளது. அந்த படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ள நந்திதா, வேடிக்கை பார்க்க வந்த இளம் பெண்களுடன் நெருங்கி பழகியிருக்கிறார். அதோடு, அவர்களுடன் இணைந்து நிறைய செல்பிக்களையும் எடுத்துக்கொண்டாராம். இந்நிலையில், படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருந்தபோது சில பெண்கள் நந்திதாவை உரிமையோடு தங்களது வீட்டிற்கு சாப்பிட அழைத்திருக்கிறார்கள்.
அதோடு, தங்களது ஊர் பாணியில், இத பாரு ஒருநாளாவது எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தே ஆகனும். இல்லாட்டி நாளை இந்த ஊர்பக்கம் படப்பிடிப்புக்கு வர முடியாது - என்று கூறினார்களாம். அவர்களின் பேச்சு மிரட்டும் தொனியில் இருந்ததால், சற்று கலவரமடைந்து விட்டாராம் நந்திதா. அதையடுத்து இந்த மதுரைக்காரங்க பாசமா சொல்றதுகூட மிரட்டுறது மாதிரிதான் இருக்கும் என்று சிலர் அவருக்கு புரிய வைத்த பிறகுதான் நந்திதாவின் பயம் போனதாம்.