டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
சிம்பு, அனிருத்தின் அந்தக் கேலவமான பாட்டைப் பற்றி எழுதவே கூசுகிறது. இருந்தாலும் அப்படி ஒரு தவறை அவர்கள் மட்டுமல்ல வேறு யாரும் மீண்டும் செய்யக் கூடாது என்பதற்காகவே எழுத வேண்டியிருக்கிறது. சில குறிப்பிட்ட தனக்குப் பல வகையிலும் உதவி செய்யும் சிலரிடம் மட்டுமே அந்தப் பாடல் குறித்து சிம்பு வாய் திறந்து பேசியிருக்கிறார்.
அப்போது அந்தப் பாடலை யாரோ திருடி வெளியிட்டுவிட்டதாகவும், அந்தப் பாடல் என்னிடம் மட்டுமல்ல அனிருத்தின் நண்பர்களிடமும் உள்ளது எனவும் கூட இருப்பவர்களையும் போட்டுக் கொடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் மொபைல் போன்கள் என்பது ஒவ்வொருவரின் 'பர்சனல் டைரி' போலத்தான் இருக்கிறது. அடுத்தவர்கள் அவசரத்திற்குக் கேட்டால் கூட பேசத் தருவதில்லை. அப்படியிருக்கும் போது சிம்பு போன்ற ஒரு நடிகர் அந்த மொபைல் போனையோ அல்லது அந்தப் பாடலையோ அவரையும் அனிருத்தையும் தவிர வேறு யாருக்கும் பகிர்ந்திருக்க முடியாது.
அப்படியே அவர்களிடமிருந்து அந்தப் பாடல் திருடப்பட்டதாகத் தெரிந்திருந்தால் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க முடியும். அந்தப் பாடல் இணையத்தில் அவர்கள் கூற்றுப்படியே 'லீக்' ஆனதாகச் சொல்லப்பட்டாலும் 24 மணி நேரத்திற்குள் காவல் துறையிடம் புகார் அளித்திருக்கலாம். அப்படி புகார் கூறியிருந்தால் அந்தப் பாடல் திருட்டு குறித்து உண்மை விவரம் தெரிந்திருக்கும். அதை விட்டுவிட்டு நெருங்கிய சில பத்திரிகையாளர்களிடம் அந்தப் பாடலைக் குறித்துப் பேச நேரமிருந்திருக்கிறது. அதில் கூட இந்தப் பாடல் திருடப்பட்டது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளேன் என்று ஒரு வார்த்தையும் இடம் பெறவில்லை.
சமீப காலமாக திரையுலகத்தில் 'நெகட்டிவ் பப்ளிசிட்டி' என்ற ஒரு விஷயம் அதிகமாகப் பரவி வருகிறது. கோடி ரூபாய் கொடுத்து செலவு செய்து விளம்பரப்படுத்தினாலும் கிடைக்காத ஒரு விளம்பரம் இப்படி 'நெகட்டிப் பப்ளிசிட்டி'யால் கிடைக்கிறது.
சமீபத்தில் கூட நடிகை மீனாட்சி ஒரு உதவி இயக்குனரை அடித்ததாகச் சொல்லப்படும் விஷயம் கூட வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு 'பப்ளிசிட்டி ஸ்டன்ட்' என்றுதான் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த சங்கங்களில் கூடப் புகார் தெரிவிக்காமல் அதை முதலில் பத்திரிகையாளர்களுக்குத் தெரியப்படுத்துவதில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு உதாரணமாய் இன்னும் பல சம்பவங்களைச் சொல்லலாம். சிம்பு, அனிருத் 'பீப் சாங்'விவகாரம் திட்டமிடப்பட்டு பரவப்பட்ட ஒரு விளம்பரம் தேடும் செயல்தானே தவிர வேறொன்றுமில்லை என்று கோலிவுட்டில் உள்ளவர்களே ஆணித் தரமாகத் தெரிவிக்கிறார்கள். சிம்பு, பாடல் திருட்டு குறித்து காவல் துறைக்குச் செல்வதற்கு முன் காவல் துறை அவரைக் கைது செய்யும் நிலையும் தற்போது நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.