பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும்போது, நடிகர் நடிகைகள் தங்கள் பொன்னான நேரத்தை மக்களோடு நின்று அவர்களுக்கு பணியாற்றுவதற்கு செலவிடும்போது கொஞ்சம்கூட சமூக பொறுப்பு இல்லாமல் பீப் சாங் என்ற தலைப்பில் ஒரு ஆபாச பாடல் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பாடலை சிம்பு, எழுதி பாடியுள்ளார் என்றும், அனிருத் இசை அமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பாடல் முழுக்க ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அந்த இடத்தில் பீப் சவுண்ட் போட்டிருந்தாலும் எல்லோரும் அந்த வார்த்தையை கணிக்க முடியும். இந்தப் பாடலை சிம்பும், அனிருத்தும் தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததாகவும் அதனை யாரோ வெளியிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் லீக்காக்கி பார்ப்போம் மக்கள் வரவேற்பை பொறுத்து வெளியிடுவோம் என்ற சிம்பு தரப்பே செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிம்பு, "நான் எந்த பாடலை பாடுவது என்பது என் தனிப்பட்ட சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது. நான் பாத்ரூமில் பாடுவதையெல்லாம் யாரோ திருடி வெளியிட்டால் அதற்கு நானா பொறுப்பு?" என்று கூறியிருக்கிறார். "சிம்பு வீட்டு பாத்ரூம் கதவும், ஜன்னலும் அம்புட்டு வீக்கா" என்று கேட்கிறான் ரசிகன்.
சிம்பு-அனிரூத்திற்கு மகளிர் அமைப்பு கண்டனம் : இதனிடையே சிம்பு, அனிரூத்திற்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை இருவருக்கும் எதிராக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் சிம்பு-அனிரூத் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்களது உருவபோஸ்டரை கிழித்தும், அவமதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.