வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
களவாணி படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை ஓவியா. கலகலப்பு படத்திற்கு பிறகு கிளாமர் ரூட்டிலும் பயணித்து வரும் அவர், தற்போது கதாநாயகி மட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிக்கத் தொடங்கி விட்டார். மதயானைக்கூட்டம், சண்டமாருதம், 144 படங்களுக்குப்பிறகு அவர் யானையுடன் இணைந்து நடித்துள்ள சீனி என்ற படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அடுத்து தெலுங்கு, கன்னட படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார் ஓவியா.
இதுபற்றி ஓவியா கூறும்போது, மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தபோது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி எனக்கு இங்கு இடம் கிடைக்கவில்லை. அதற்காக கவர்ச்சியாகவும் நடித்தேன். ஆனாலும் பலன் இல்லை. நடிக்கிற படங்களின் தோல்வி காரணமாக தொடர்ந்து பல சறுக்கல்களை சந்தித்தேன். இருப்பினும் அவ்வப்போது ஏதாவது படங்களை கைப்பற்றி இன்னும் பீல்டில் இருக்கிறேன்.
இந்த நேரத்தில்தான் மற்ற மொழிகளிலும் பரவலாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படவே தற்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன். இதையடுத்து இந்தி சினிமா வரை கோலேச்ச வேண்டும் என்ற ஆசையும் எனக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், எனது உடம்பு ஸ்லிம்மாக இருப்பதோடு, ஹோம்லி-கிளாமர் என இரண்டுவிதமாக கதாபாத்திரங்களுக்கும் நான் பொருத்தமான நடிகையாக இருக்கிறேன். இதை சில டைரக்டர்களே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கைதான் இப்போது எனக்கு பல மொழிகளிலும் நடிப்பதற்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. அதனால் எந்த மாதிரியான வேடங்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடித்து புகழ் பெற முடிவெடுத்து விட்டேன் என்கிறார் ஓவியா.